News December 19, 2024

நாமக்கல்லில் இரட்டைக் கொலை: சிக்கிய மூவர்

image

வெப்படை அருகே தனியார் நூற்பாலையில், பணிபுரிந்துவந்த 2 வட மாநிலத்தவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங்க் ஆகிய மூன்று வட மாநில இளைஞர்கள் மது போதையில் துபலேஷ், முன்னா ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் வெப்படை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

Similar News

News November 12, 2025

நாமக்கல்: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 12, 2025

மோகனூர் அருகே விபத்து ஒருவர் பலி!

image

மோகனூர் அடுத்த காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் கரூர் மாவட்டம் புகளூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அயர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News November 12, 2025

நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

image

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!

error: Content is protected !!