News January 23, 2026
நாமகிரிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

நாமகிரிப்பேட்டை அருகே திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சிலம்பரசன்(45), நேற்று காலை ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றபோது, ராசிபுரத்திலிருந்து வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
நாமக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 9, 2026
நாமக்கல்லில் மகனை கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு!

நாமக்கல் மாவட்டம், மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முத்துசாமி (75) என்பவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் தீவிர முயற்சியால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News February 9, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் 10.02.2026 அன்று நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 17.02.2026 ஆம் தேதி முகாம் நடைபெறும். மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


