News December 19, 2025

நாமகிரிபேட்டை அருகே வாலிபர் மர்மசாவு!

image

நாமகிரிபேட்டை, ஈஸ்வரமூர்த்திபாளைத்தில் முத்துலிங்கம் என்பவர் தனது தோட்டத்தின் அருகே செல்போன் கோபுரம் அருகில் நேற்று முன்தினம் 30 வயது ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை போலீசாருக்கு தெரிவித்தார். விசாரணையில் இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என உறுதி செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்த நிகழ்வின் காரணம் குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

மல்லசமுத்திரம் அருகே விபத்து! VIDEO

image

சின்னதம்பிபாளையம் அருகே நேற்று (டிச.25) டெம்போ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் இல்பான் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். டெம்போவில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினர். இது குறித்து மல்லசமுத்திரம் எஸ்ஐ கவி பிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News December 25, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, ‘எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் டிச. 29., அன்று பிற்பகல் 3 மணி அளவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT

News December 25, 2025

நாமக்கல்லில் உச்சம் தான்! மாற்றமே கிடையாது!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!