News August 2, 2024

நான் முதல்வன் திட்டம் – குமரி மாவட்ட விவகாரம்

image

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், குமரி மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 2787 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாத நிலவரப்படி https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index இணையதளத்தில் 13,303 பேர் தங்களது விருப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக பாலிடெக்னிக் மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Similar News

News September 16, 2025

குமரியில் கல்வி கடன் மேளா அறிவிப்பு

image

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2-வது கல்விக் கடன் மேளா செப்.18 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

குமரி: உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்ட MLA ராஜேஷ்

image

மத்திய அரசை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கிள்ளியூர் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக கிள்ளியூர் வட்டார RGPRS தலைவர் P. பிரேம் சிங் தலைமையில் தொலையாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (செப். 16) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.

News September 16, 2025

குமரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!