News May 8, 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.
Similar News
News December 19, 2025
காலநிலை மாற்றம் தழுவல், தணிப்பு உத்திகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு உத்திகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியினை
ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.19) தொடங்கி
வைத்து, கேடயங்களை வழங்கினார்.இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சி:மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

சிறுவங்கூர் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் இன்று (டிச.19) நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


