News March 15, 2026
நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்: OPS

நான் செய்த மிகப்பெரிய தப்பு EPS-ன் 4 ஆண்டுக் கால ஆட்சி தொடர்வதற்கு நம்பிக்கை தீர்மானத்தின் போது 5 MLA-க்களை வைத்து ஆதரவு தெரிவித்ததுதான் என OPS கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்ததால் தென்பகுதி மக்கள் EPS-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அரசியலில் உள்ள ஒரே ஒரு துரோகியான அவரை தமிழக வாக்காளர்கள் அரசியலிருந்து துடைத்து எறிவார்கள் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News March 29, 2026
மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.
News March 29, 2026
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
இலங்கைக்கு எரிபொருள் உதவி செய்த இந்தியா

மேற்காசிய போரால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சில நாள்கள் முன்பு PM மோடியிடம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியிருந்தார். இதன் பலனாக 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் உதவிக்கு PM மோடி, EAM ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் நன்றி கூறியுள்ளார்.


