News February 9, 2026

‘நான் சாகப் போகிறேன்’

image

‘பெற்றோர் பேச்சை கேட்காமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விடைபெறுகிறேன்’. ஆந்திராவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பத்மாவின்(28) கடைசி வரிகள் இவை. கணவன் வேலைக்குச் செல்லாமல் ஊரை சுற்றி கடன் வாங்கியதால், அப்பெண் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. உணருங்கள்!

Similar News

News February 11, 2026

பிப்ரவரி 11: வரலாற்றில் இன்று

image

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938 – பிபிசி தொலைக்காட்சி உலகின் முதல் அறிவியல் புனைகதை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா, சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1847 – தாமசு ஆல்வா எடிசன் பிறந்த தினம்
1977– இந்தியாவின் 5-வது ஜனாதிபதி பக்ருதின் அலி அகமது இறந்த தினம்
2001 – தமிழ் நடிகர் ஜெய்கணேஷ் இறந்த தினம்

News February 11, 2026

கட்சியில் இருந்து விலகுகிறேன்.. அதிமுகவில் ஐக்கியம்?

image

உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் இல்லாததால் IJK-வில் இருந்து விலகுவதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அறிவித்துள்ளார். EPS-ஐ சந்தித்ததால், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட லீமா ரோஸை பாரிவேந்தர் அழைக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அவர், இணைப்பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 11, 2026

செல்வப்பெருந்தகைக்கு அந்த தகுதி கிடையாது: வன்னி அரசு

image

விசிக, காங்., இடையிலான மோதல் நீண்டுகொண்டே செய்கிறது. காங்., கட்சிக்குள் இருக்கும் குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பூசலை முதலில் செல்வப்பெருந்தகை சரிசெய்ய வேண்டும் என்று வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை, அவருக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு இன்னும் செல்வப்பெருந்தகை வளரவில்லை என்றார்.

error: Content is protected !!