News September 21, 2025
நான் ஒரிஜினல் விவசாயி – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலையில் இன்று (21.09.2025) தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பழனிசாமி, செயலாளர் இரா. சுப்பிரமணி, துணைத் தலைவர் அ.எ. கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அமைச்சர் எ.வ. வேலு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார். இதில், பேசிய அமைச்சர் எ.வ.வேலு தான் ஒரிஜினல் விவசாயி என கூறினார்.
Similar News
News September 22, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 21, 2025
கிளையூரில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு

செங்கம் அருகே உள்ள கிளையூர் காளியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பல்வேறு குடும்பப் பிரச்சனைகள், பில்லி சூனியம், திருமணத் தடை, கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ அம்மன் அருள் புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதற்காக திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து புனித நீர் தெளித்து வழிபாடு செய்தனர்.
News September 21, 2025
தி.மலை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

திருவண்ணாமலை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <