News June 8, 2024
நாட்றம்பள்ளி: பராமரிப்பு பணி தீவிரம்

நாட்றம்பள்ளி அடுத்த நாயனதெரு அரசு பள்ளியில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நாகராஜ் தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தேர்வு அறைகள் மற்றும் பள்ளி கழிவறைகள் சுகாதாரமாக வைத்தல் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர்.
Similar News
News August 24, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். அருவியில் குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
News August 24, 2025
திருப்பத்தூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 4 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 2 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 4 நகராட்சி
▶️ 3 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 4 வட்டங்கள்
▶️ 195 வருவாய் கிராமங்கள்
▶️ 208 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 6 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.