News May 6, 2024

நாட்றம்பள்ளி அரசு பள்ளியில் 100% தேர்ச்சி

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 5, 2025

துத்திப்பட்டு ஊராட்சி தலைவரின் அதிகாரம் ரத்து

image

ஆம்பூர் தாலுகா. மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் பல்வேறு முறைகேடு சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேசன் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுவேதாவின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை மாவட்ட ஏ.டி பஞ்சாயத்து அலுவலர் ரத்து செய்யது உத்தரவு பிறப்பித்தார்.

News July 4, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சிக்கு உட்பட்ட கரத்தலான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி சங்கீதா (30) என்பவர் இன்று மாலை 4:30 மணி அளவில் தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற திம்மாம்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!