News December 24, 2024
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் – மர்ம நபருக்கு வலைவீச்சு

வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர், காவல்துறையை பார்த்ததும் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனிடத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். வேட்டையாட துப்பாக்கி எடுத்து வரப்பட்டதா என விசாரணை நடத்தினர்.
Similar News
News August 22, 2025
தேசிய கொடியை அவமதித்த நபர் கைது

கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிந்த வல்லப பந்துலு என்பவர், நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்களை காணவில்லை என பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, தனது இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது தேசிய கொடிய அவமதித்ததாக வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
News August 22, 2025
தஞ்சாவூரில் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான, விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
தஞ்சாவூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <