News June 23, 2024
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி

நாகை கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூன்.26ஆம் தேதி அளிக்கப்படுகின்றது. இதில், நாட்டுக்கோழிகளின் இனங்கள் வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, குஞ்சுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 04365 247123 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலை கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
நாகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

நாகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News August 13, 2025
மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்; ம்னுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
கால்நடை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ். கீழ்வேளுர் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்தில் ஏழை கால்நடை விவசாயிகளுக்கு சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் மூலமாகவும், மற்றும் துணை பதிவாளர் பால் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.