News June 25, 2024
நாட்டுக்கோழி வளர்க்க மானியம் அறிவிப்பு

மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக கால்நடைத்துறை அறிவித்துள்ளது. கொட்டகைக்கான கட்டுமான செலவு, தீவனத்தட்டு உள்ளிட்ட செலவு ஆகியவற்றில் 50 சதவீதம் என அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மானியம் பெறலாம். இதில், விதவை, ஆதரவற்றோர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
Similar News
News March 2, 2026
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பிரதமர் மோடி நேற்று மதுரை வந்து சென்ற நிலையில், மதுரை தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
News March 2, 2026
மதுரை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.!

சோழவந்தான் அருகே கீழ நாச்சிகுளத்தை சேர்ந்தவர் நபிஷா (70). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பாக அமர்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். வீட்டு அருகில் அடர்த்தியாக புதர் மண்டியிருந்த பகுதியிலிருந்து வெளிவந்த பாம்பு மூதாட்டியை தீண்டியது. மயங்கி விழுந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
News March 2, 2026
மதுரை: கார் – வேன் மோதல்; ஒருவர் பரிதாப பலி.!

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


