News July 3, 2024

நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது

image

2011ஆம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த நாட்டின் ஏழ்மை, தற்போது 8.5 சதவீதமாக குறைந்துள்ளது. NCAER அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, பணவீக்க மதிப்பு சரிசெய்யப்பட்டு இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மை 24.8 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக சரிந்திருப்பதாகவும், நகர்ப்புறங்களில் ஏழ்மை 13.4 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக சரிந்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 21, 2025

வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

image

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.

News September 21, 2025

இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

image

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.

News September 21, 2025

BREAKING: நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி!

image

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் மிகப்பெரிய சேமிப்பு திருவிழா என மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்கள் 2.5 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகள் ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

error: Content is protected !!