News April 16, 2025
நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்?

நாங்குனேரியைச் சேர்ந்த சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னதுரை Grindr ஆப் மூலம் பழகிய மர்ம நபர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திற்கு இன்று வரவழைத்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தாக்கியது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 19, 2025
“பொதுமக்கள் சட்ட உதவிக்கு அணுகலாம்”

பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அரங்கில் நேற்று ஏப்ரல் 18 நடைபெற்ற மாபெரும் மரக்கன்று நடும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினருமான தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். அப்போது அவர், “பொதுமக்கள் எந்த நேரமும் சட்டப்பணிகள் ஆணையக் குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சட்ட ரீதியான உதவிகள் செய்ய ஆணைக் குழு தயாரக உள்ளது” என்றார்.
News April 18, 2025
ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <
News April 18, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <