News October 25, 2025
நாகை: 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

நாகை மாவட்டத்தில், 2025 குறுவைப் பருவத்தில் இதுவரை 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகம். இதுவரை 14,600 விவசாயிகளுக்கு ரூ. 175.99 கோடி தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
News October 25, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
News October 25, 2025
நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.


