News April 17, 2024

நாகை: 5 நாட்கள் டாஸ்மாக் அடைப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், மே. 1 தேதியும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 26, 2025

நாகையில் சைக்கிள் போட்டி: கலெக்டர் அறிவிப்பு

image

நாகையில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நாளை நடத்தப்பட உள்ளது. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

image

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28ம் தேதி காலை நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் கங்களாஞ்சேரி வரை நடைபெற உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

நாகையில் 1225 விவசாயிகள் பயன்

image

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 8678 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1225 விவசாயிகள் பயன் அடைந்து அதற்கான தொகை ரூபாய் 18 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!