News January 8, 2026
நாகை: 2 இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்

திருக்குவளையைச் சேர்ந்த பெண் அரசு ஊழியரிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பறித்த வழக்கில், ஒரு சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கச்சநகரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கைதான ஏங்கல்ஸ் (18), பிரகாஷ் (22) ஆகிய இருவர் மீதும் ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பின்னர் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 5, 2026
நாகையில் வேலை வேண்டுமா?

நாகை மாவட்டம் பாப்பாகோவில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.6) நடைபெற உள்ளது. இம்முகாமில் 2021 -25ஆம் ஆண்டு படித்து முடித்த ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு சான்றிதழ்களின் நகல்கள் 5, பயோ டேட்டா உடன் கலந்து கொள்ள நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.
News February 5, 2026
நாகை: ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுரேஷ்குமார், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
நாகை: மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

நாகை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் மரியதாஸ். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மரியதாஸ் மகள் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியாதாஸ் மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுறித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர்.


