News January 15, 2026
நாகை: 12 பைக்குகளை திருடிய நபர் கைது!

நாகை மாவட்டம் கீழையூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈ.சி.ஆர் ரோட்டில் வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்து கீழையூர் காவல் நிலைய போலீசார் விசரித்தனார். மேலும் அவரிடம் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.
Similar News
News February 20, 2026
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 20, 2026
நாகை: அழுகிய நிலை கிடந்த ஆண் சடலம்

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சி மாதா கோவில் தெரு அருகில் வளப்பாறு அருகில் உள்ள வயலில் அழுகிய நிலையில் ஆண் சடலன் கிடந்துள்ளது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையெடுத்து தகவலின் பெயரில் நாகூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? சடலம் எப்படி இங்கு வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 20, 2026
நாகை மாவட்டத்தில் மதுவேட்டை : 626 பாட்டில்கள் பறிமுதல்!

நாகை எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், வாழ்மங்கலம் சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் கடத்திய 626 பாண்டி சாராய பாட்டில்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனம், மொபைல் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


