News November 1, 2025
நாகை: விவசாயிகள் வங்கி கணக்கில் 218 கோடி!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் குருவை நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை, 19,142 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 218 கோடியே 79 இலட்சத்து 7 ஆயிரத்து 89 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 1, 2025
நாகை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் சேவையில் மாற்றம்

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி, வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் நவ.2 மற்றும் 4ஆம் தேதிகளில், தற்காலிகமாக முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.


