News January 3, 2026

நாகை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Similar News

News February 9, 2026

நாகை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

நாகை: பாலியல் தொல்லை அளித்த கொத்தனார் கைது

image

கீழ்வேளூரை சேர்ந்தவர் முருகேசன் (40). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று மனவளர்ச்சி குன்றிய 30 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 9, 2026

நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!