News January 1, 2025
நாகை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி தண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக் கலை துறை அலுவலர்களை அணுகி பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!
News November 4, 2025
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
நாகை ஆட்சியருக்கு எம்.பி. கோரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் மருதூர், தகட்டூர், பஞ்சநதிகுளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி விவசாய பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுமாறு நாகை ஆட்சியருக்கு எம்.பி.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


