News January 1, 2025

நாகை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி தண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக் கலை துறை அலுவலர்களை அணுகி பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News January 9, 2026

நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.9-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

நாகை: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!