News November 9, 2025
நாகை: விஏஓ கொலை; 2 திருநங்கைகள் கைது

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே முகத்தில் காயங்களுடன் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன், கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. பணத்துக்காக திருநங்கைகள் நிவேதா, ஸ்ரீ கவி ஆகியோர் ராஜாராமன் முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தது போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது. கொலைக்குப் பிறகு பணம், மொபைல், மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டு கடலூர் தப்பிய இருவரையும் நாகை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 9, 2025
நாகை: அரசு வேலை-தேர்வு இல்லை!

நாகை மாவட்டத்தில் 18 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
நாகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
நாகை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவ.10) கடைசி நாளாகும். 42 வயதுக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


