News November 1, 2025

நாகை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு சிறை

image

திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.1500 லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதில், நவம்பர் 14ஆம் தேதி சிறையில் அடைக்க உத்தரவை தொடர்ந்து, திருச்சியில் உள்ள மகளிர் சிறைச்சாலையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Similar News

News November 2, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 1, 2025

நாகை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் சேவையில் மாற்றம்

image

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி, வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் நவ.2 மற்றும் 4ஆம் தேதிகளில், தற்காலிகமாக முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!