News June 16, 2024

நாகை மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

image

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் நேற்று முதல் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்களின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் வெளி மாநில மீனவர்களை அழைத்து செல்ல கூடாது இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது அடையாள அட்டை படகு உரிமம் உயிர் காப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் இரட்டைமடி வலை பயன்படுத்த கூடாது என மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Similar News

News March 1, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

image

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News March 1, 2026

நாகை மாவட்டத்தில் பொழிந்த பனிப்பொழிவு

image

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைகாண் சாவடி, ஆலங்குடிசேரி, வாழ்மங்கலம் போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. எதிரில் வரும் வாகனம் கூட தெரியவில்லை என்று வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். மாசி மாதம் வந்தால் மரம் எல்லாம் குளிரும் என்ற முன்னோர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.

error: Content is protected !!