News November 19, 2025

நாகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News November 19, 2025

நாகை மாவட்டத்தில் 9.1 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாகையில் 2.9 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.8 செ.மீ, திருக்குவளை 0.9 செ.மீ, வேளாங்கண்ணி 0.6 செ.மீ, வேதாரண்யம் 0.1 செ.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9.1செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

நாகை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News November 19, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமை பணிகளில் தேர்ச்சி பெறுவதற்காக ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்<> www.fisheries.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, வருகிற நவ.25-ம் தேதிக்குள் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!