News October 12, 2025
நாகை: மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

நாகை மாவட்டம், கீழையூரை சேர்ந்த புரட்சிதாசன் மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மாணவனை மீட்ட அவரது உறவினர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீபராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 4, 2026
நாகை: வருவாய் அலுவலர்க மாற்றம்

நாகை வருவாய் அலுவலர் பவணந்தி வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளார். அதில், கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளராக வித்யா, நாகை ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வருவாய் ஆய்வாளராக பத்மநாபன், ஆட்சியர் அலுவலக சி 1 பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக கௌதம், நாகை தாசில்தார் அலுவலக முதுநிலை, அ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பிராங்கிளின் சாம்ராஜ், புனிதா ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 4, 2026
நாகை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
நாகை: விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகை மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின விவசாயிகள் 50 பேருக்கு, எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, வருகிற 6ஆம் தேதி சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 80567-08663 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


