News October 17, 2025
நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று(அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக் அழைப்பு

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News October 17, 2025
நாகை: அரசு மருத்துவர் சாலை விபத்தில் பலி

வேதாரண்யம் வட்டம், கருப்பம் புலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் நந்தினி. இவர் இன்று 17ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் காரைக்கால் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மருத்துவர் நந்தினி மரணமடைந்த சம்பவம் வேதாரண்யம் வட்டார பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.