News January 11, 2026
நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் வரும் ஜன.16-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜன.26-ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
நாகை: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 1, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், பிப்.02-ம் தேதி முதல் 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் பெறும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHARE பண்ணுங்க!


