News October 14, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகி அக்.16 காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
நாகை: தந்தையை கொலை செய்த மகன் கைது

நாகூர் அடுத்த வெங்கிடங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர். நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்த சேகருக்கும் அவரது மகன் வெங்கடேஷுக்கும் இடையே நேற்று கடும் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனது தந்தை சேகரை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து புகாரின் பேரில் நாகூர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
நாகை: கடத்தலில் ஈடுபட்டவர் கைது

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இசிஆர் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீநாத் (41) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காரில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News October 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று(அக்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க