News January 5, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜன. 6) செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
நாகை: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 1, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், பிப்.02-ம் தேதி முதல் 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் பெறும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHARE பண்ணுங்க!
News February 1, 2026
நாகை: சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று (ஜன.31) கீழ்வேளூர் மற்றும் வெளிப்பாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மாவட்ட காவல்துறை அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


