News October 14, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இனத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்கல்வி பயில கல்வி கடன் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

நாகை: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <>க்ளிக் <<>>செய்யவும். இதனை SHARE பண்ணுங்க.!

News October 14, 2025

நாகை: தயார் நிலையில் 2500 மணல் மூட்டைகள்!

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்குவளை உட்கோட்டத்தில் நாகை கோட்டப்பொறியாளர் ராஜேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவிக் கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

News October 14, 2025

நாகை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. பணியிடம்: தமிழ்நாடு
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!