News October 15, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணி 2.8 செ.மீ, நாகை 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் தலா ஒரு செ.மீ-க்கும் குறைவாக மழை பதிவாகி உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் மந்தமான வானிலை நிலவி வருவதோடு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது.
Similar News
News October 15, 2025
நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
நாகை பற்றிய அறிய தகவல்!

நாகை ஒரு கடற்கரை நகரம் ஆகும். இது சோழ குல வள்ளிபட்டினம் என்றும் அறியப்பட்டது. கிமு 3 வது நூற்றாண்டில் பர்மிய வரலாற்று உரையில் இது ஒரு பாரம்பரிய நகரமாக தெளிவு படுத்தப்படுகிறது. அறிஞர்களின் கூற்றுப்படி பண்டைய புத்த இலக்கியத்தில் ”படரிதித்த” இல் இருந்து மருவி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். பண்டைய காலங்களில், நாகநாடு , நாகப்பட்டினம் என்பது மட்டுமே ஸ்ரீ லங்கா வால் குறிப்பிடப்படுகிறது. SHARE IT.
News October 15, 2025
நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <