News October 21, 2025

நாகை மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News October 21, 2025

நாகை: நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு!

image

நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகங்களில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 8ம் வகுப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள், கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மகாலட்சுமி நகர் நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு, அனுப்பிடலாம் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

நாகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

image

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News October 21, 2025

நாகை: திருக்குறள் போட்டிக்கு அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு “திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு “திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ரொக்க பரிசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தகுதி உள்ள மாணவ,மாணவியர் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!