News May 24, 2024
நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது உதவி தொகையை தொடர்ந்து பெற ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் நகல் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10க்குள் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
நாகை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

நாகை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
நாகை: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் டிசம்பர் மாதம் பருவம் தவறி மழை பெய்த காரணத்தினால், தளாடி பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நடவு செய்து 50 நாட்களே ஆன நிலையில், இம்மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக கடைமடை விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக ஆற்றை தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
News February 8, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் சென்னையில் வழங்கபட உள்ளது. இப்பயிற்சியில் இளைஞர்கள் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து 3 மாத பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


