News January 7, 2026

நாகை: மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜன.21 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், குறளாசிரியர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் ஜன.9 அன்று பிற்பகல் 2 மணிக்கு, இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளபவர்கள் 9361521593 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

நாகை: அபுதமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக M. லிங்கேஸ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்
வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள் மக்களே..!

News April 5, 2026

நாகை: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

image

மன்னார்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பருமான பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே எதிரே வந்த கார் பைக் மீது விபத்தி ஏற்பட்டது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

நாகை: இளைஞர் தீக்குளித்து தற்கொலை

image

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர் விக்னேஷ்(35). இவர் திருமணம் ஆகத நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்து வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய், விக்னேஷை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காயமடைந்த மீட்டு மருத்துமனையில் சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!