News January 30, 2026

நாகை: மனக்கவலைகள் தீர இந்த கோயில் போங்க!

image

நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.!

Similar News

News February 12, 2026

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் சென்னையில் வழங்கபட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 3 மாத பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

நாகை அருகே 7 மாத கர்ப்பிணி தற்கொலை

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி சக்தி பிரியா (29). 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!