News November 6, 2025

நாகை: மது போதையில் லாரியை திருடி நபர்

image

நாகை அடுத்த அகர கொந்தகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது லாரியை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார்(38), என்பவர் மது போதையில் திருடி சென்ற போது, ஜிபிஎஸ் கொண்டு சக்திவேல் லாரியை டிராக் செய்து சிக்கல் பனைமேடு பகுதியில் லாரியை பிடித்தார். அதனைத் தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் தினேஷ்குமாரை ஒப்படைத்தார். பின்னர் சக்திவேல் அளித்த புகாரி பேரில் கைது தினேஷ்குமார் செய்யப்பட்டார்.

Similar News

News November 6, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் 163 பாகம் நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 6, 2025

நாகை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 6, 2025

நாகை மாவட்டத்தில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

நாகை மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 91,218 மெட்ரிக் டன் நெல் கிடங்குகள் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!