News December 31, 2025
நாகை மக்களே.. நாளை இதை செய்ய மறக்காதீங்க!

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
Similar News
News December 31, 2025
நாகை-அரசுக்கு கிடைத்த ரூ.56 லட்சம்

நாகை மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 508 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டது. அதன் மூலம் அரசுக்கு ரூ.56.82 லட்சம் கிடைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
நாகை: கஞ்சா வழக்கில் 129 பேர் கைது

நாகை மாவட்டத்தில் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக 2025ம் ஆண்டில் 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 50.85 லட்சம் மதிப்புள்ள 508 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 சக்கர வாகனம் 8, இருசக்கர வாகனம் 12 கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை(ஜன.01) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


