News October 30, 2025
நாகை மக்களே இனி அலைய வேண்டியதில்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in, 3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4. பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 30, 2025
நாகை: இரவு காவலர் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலிபணியிடமாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு இணையவழியாக விண்ணப்பித்தவர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கும், நாளை அக்.31ம் தேதி காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில், அனைத்து விண்ணப்பதாரர்களும் தவறாது பங்கேற்குமாறு ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
BREAKING: நாகையில் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி ரூ.1500 லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், இன்று கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் இடையூரைச் சேர்ந்த எஸ்.கே. ரமேஷிடம், அவரது சகோதரிக்கான புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க ரூ.1500 லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
News October 30, 2025
நாகை: இ-ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

நாகை மக்களே… இ-ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.


