News September 7, 2025
நாகை மக்களே இதை குறித்து கொள்ளுங்கள்!

நாகை மக்களே. நம் பகுதிகளில் சில சமயம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 18002334233, 81100 05558 எண்களில் புகாரளியுங்கள் மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளிக்கலாம். SHARE IT!
Similar News
News September 8, 2025
நாகை மாவட்டத்தில் கல்விக் கடன் முகாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம் நாளை (செப்.9) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் மாணவர் சேர்க்கை கடிதம், மதிப்பெண் சான்று, கட்டண விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
நாகை: உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், இன்று மாநில அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 20 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
நாகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நாகை மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் முதற்கட்டமாக தொடங்கி முடிவுற்ற நிலையில், அதன் இரண்டாம் கட்ட முகாம் தற்போது பல்வேறு நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை நகராட்சி அலுவலகத்தில் செப்.10 ஆம் தேதி நடத்தப்படும். இந்த முகாமில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13வது வட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.