News November 29, 2024

நாகை மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை 

image

கால்நடை வளர்ப்போர், சந்தைப்படுத்துவோர் வாகன ஓட்டுநர்கள் கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கால்நடைகளின் எண்ணிக்கை ஏற்றி செல்வதற்கான காரணம், வாகனஎண், மருத்துவ சான்று ஆகியவற்றை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். வாகனத்தில் கால்நடைகளுக்கு போதிய வசதி இருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

image

நாகூர் – கொட்டாரகுடி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரகுடி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த நபரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெரிய கண்ணமங்களத்தை ராஜா (52) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News December 17, 2025

நாகை: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

வேதாரண்யம் நாலுவேதபதியை சேர்ந்தவர் மனோஜ் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (17) ஆகியோர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல வாஞ்சூர் ரவுண்டானா அருகே அரசு பஸ் ஒன்று மனோஜ் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ் படுகாயமடைந்தார். இதையடுத்து நாகூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் சண்முகம் (57) என்பரை கைது செய்தனர்.

News December 17, 2025

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இல்லாத பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2025-26-க்கான மஞ்சைப்பை விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு http://nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் ஜன.15-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!