News November 30, 2025
நாகை: புயலால் சாலையில் முறிந்து விழுந்த மரம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகில் உள்ள இலுப்பூர் கிராமத்தில் டிட்வா புயலின் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மெயின் ரோடு அருகே சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை கொண்டு உடனடியாக மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டது.
Similar News
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை மாவட்டத்தில் விருது பெற வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் தகுதியானவர்கள் 2026-ம் ஆண்டிற்கான கபிர் புரஸ்கார் விருதுக்கு இன்றுக்குள் (டிச.15) விண்ணப்பிக்கவும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே, சமூகம் அல்லது மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றிய நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


