News July 10, 2025
நாகை: நாய் குறுக்கே வந்ததால் சாலை விபத்தில் ஒருவர் பலி

நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் நேற்று (ஜூலை 9) இரவு வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறிய கதிரவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 27, 2025
நாகை: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 27, 2025
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.