News December 23, 2025

நாகை: தொழில் தொடங்க மானியம்

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள், சுயதொழில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

நாகை: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள் ,மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

நாகை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய நாகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

நாகை மக்களுக்கு 17 நாட்களுக்கு தடை!

image

நாகை தோணித்துறை ரோடு ரயில்வே பாலம் மற்றும் அக்கரைபேட்டை மேம்பாலம் இணைப்பு பணிகள் 27-12-2025 (இன்று) முதல் 12-01-2026 வரை 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனால் நாகை நேதாஜி சாலையில் இருந்து அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் பகுதிக்கு செல்லும் வழிதடத்தில் டூவீலர்கள் தவிர்த்து, மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல 17 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக நெடுஞ்சாலை & காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!