News July 6, 2025
நாகை – திருவாரூர் ரயில் சேவையில் மாற்றம்

கீழ்வேளூர் – திருவாரூர் இடையில் உள்ள ரயில்பாதையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தால் காரைக்கால் – நாகை – திருவாருர் இடையே ஆன பயணிகள் ரயில் ஜூலை 9 ந்தேதி முதல் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் – திருச்சி ரயில் வழக்கமான நேரத்தில் திருவாரூரில் இருந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்!

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்.
▶வேதாரண்யம்-04369-250457,
▶திருக்குவளை-04365-245450,
▶கீழ்வேளூர்-04366-275493,
▶நாகப்பட்டினம்-04365-242456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.!
News July 6, 2025
நாகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்!
News July 6, 2025
நாகை: விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்?

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!