News February 26, 2026
நாகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 1, 2026
நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
News March 1, 2026
நாகை மாவட்டத்தில் பொழிந்த பனிப்பொழிவு

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைகாண் சாவடி, ஆலங்குடிசேரி, வாழ்மங்கலம் போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. எதிரில் வரும் வாகனம் கூட தெரியவில்லை என்று வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். மாசி மாதம் வந்தால் மரம் எல்லாம் குளிரும் என்ற முன்னோர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.
News March 1, 2026
நாகை: திருட்டு வழக்கில் 7 ஆண்டு சிறை

சங்கமங்கலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி30), கடந்த 2005-ம் ஆண்டு ஜெயலட்சுமியின் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின் பேரில் நாகை அடைக்கலராஜ் (55), அன்பழகன் (28), திருவெறும்பூரை சேர்ந்த பூசைமணி (28) இவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் அடைக்கலராஜ் இருந்துவிட்டார். மேலும் 2 பேருக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 7 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


