News October 14, 2025
நாகை: தந்தையை கொலை செய்த மகன் கைது

நாகூர் அடுத்த வெங்கிடங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர். நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்த சேகருக்கும் அவரது மகன் வெங்கடேஷுக்கும் இடையே நேற்று கடும் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனது தந்தை சேகரை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து புகாரின் பேரில் நாகூர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
நாகை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. பணியிடம்: தமிழ்நாடு
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 14, 2025
நாகை: ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் திறப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியா்கள், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுட்பட்டனர். இந்நிலையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பயிா் கடன், உரம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.
News October 14, 2025
நாகை: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!