News January 2, 2026

நாகை: சாலை விபத்தில் போலீஸ் பலி

image

பஞ்சநதிகுளத்தை சேர்ந்தவர் தமிழ் குடிமகன் (31). திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் இவர், கடந்த 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து பஞ்சநதிகுளம் நோக்கி சென்றுள்ளார். அப்போது தேத்தாக்குடியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 3, 2026

நாகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

எட்டுக்குடி முருகனுக்கு சிறப்பு பூஜை!

image

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் புகழ்பெற்ற எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, ஶ்ரீ முருக பெருமானுக்கு பால், தேன், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் மற்றும் தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News February 3, 2026

நாகை: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டமானது மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை, நாகூர், திருமருகல், திருப்பூண்டி, திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம், விழுந்தமாவடி, வாய்மேடு, கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!