News December 18, 2025
நாகை: கூரை வீட்டிற்கு தீ வைத்த நபர்!

திருமருகலை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர் வேலைக்கு சென்ற நிலையில் வாய் பேச முடியாத மகன் வசந்த் மட்டும் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கீர்த்திவாசன் குடிபோதையில் செல்வராஜ் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வசந்த் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சித்த நிலையில் வீடு முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து போலீசார் கீர்த்தி வாசனை கைது செய்தனர்.
Similar News
News December 25, 2025
நாகை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
நாகை: CPM செயலாளர் சண்முகம் நினைவஞ்சலி

நாகை மாவட்டம் கீழ்ண்மணியில், 57-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில், CPM மாநில செயலாளர் சண்முகம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வாசுகி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
News December 25, 2025
அடையாள எண் பெற: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்ட விவசாயிகள் டிச.28-ஆம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதம மந்திரி கௌரவத் தொகை, பயிர்க் காப்பீடு பெற இந்த எண் அவசியம் எனவும், விவசாயிகள் அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வேளாண்மை அலுவலகங்களுக்குச் சென்று ஆதார், கைப்பேசி எண், பட்டா விவரங்கள் கொடுத்து எண்ணைப் பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


